Friday, 20 September 2024

உனக்கென மட்டும்
வாழும் இதயமடா(டி).
::::::::::::::::::::::::::::::::::::::::::
உயிரென நினைத்தேன்
உள்ளத்தைக் கொடுத்தேன்/
உறவெனக் கண்டேன்
உதிரத்தில் இணைத்தேன்/
உறங்கிட இதயத்தையே
உறைவிடமாய் அளித்தேன்/
உணர்வுக்குள் விதைத்தேன் 
உணர்ச்சியால் ரசித்தேன் /

உனக்கும் எனக்குமான 
உதயமென மகிழ்ந்தேன்/
உல்லாசமாய் மலர்ந்தேன் 
உதிரிப்பூவாய் இருந்தேன் /
உசுப்பேத்தியே கைப்பிடித்தாய்
உதறியே கதறடிக்காய்/
உச்சத்தில் துயரேற்றினாய் 
உச்சரிப்பில் வலியேற்றினாய் /

உண்மையைக்  கூறினால்
உணர்ந்திடுவாயோ என்னில்  /
உனக்கென மட்டும் வாழும் இதயமடா(டி)/
உற்சாகமும் சோர்வும் 
உன்னால் ஆனவையெடா/
உற்றுழியாய்க் கொல்லுவதை
உற்றுத்தான் பாருடா (டி)./

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment