உனக்கென மட்டும்
வாழும் இதயமடா(டி).
::::::::::::::::::::::::::::::::::::::::::
உயிரென நினைத்தேன்
உள்ளத்தைக் கொடுத்தேன்/
உறவெனக் கண்டேன்
உதிரத்தில் இணைத்தேன்/
உறங்கிட இதயத்தையே
உறைவிடமாய் அளித்தேன்/
உணர்வுக்குள் விதைத்தேன்
உணர்ச்சியால் ரசித்தேன் /
உனக்கும் எனக்குமான
உதயமென மகிழ்ந்தேன்/
உல்லாசமாய் மலர்ந்தேன்
உதிரிப்பூவாய் இருந்தேன் /
உசுப்பேத்தியே கைப்பிடித்தாய்
உதறியே கதறடிக்காய்/
உச்சத்தில் துயரேற்றினாய்
உச்சரிப்பில் வலியேற்றினாய் /
உண்மையைக் கூறினால்
உணர்ந்திடுவாயோ என்னில் /
உனக்கென மட்டும் வாழும் இதயமடா(டி)/
உற்சாகமும் சோர்வும்
உன்னால் ஆனவையெடா/
உற்றுழியாய்க் கொல்லுவதை
உற்றுத்தான் பாருடா (டி)./
No comments:
Post a Comment