வாழ்வும் வளமாகும்
பெற்றோரை வணங்கிடவே.
************************--******
சிலையின் முன் நின்று
தலைக்கு மேல் இருகரம் ஏற்றி
ஏதேதோ புலம்புகிறாய்/
வடக்குத் திசைப் பார்த்துப்
பன்னீர் தெளிக்கிறாய்/
கிழக்கை நோக்கிப்
பூக்கள் குவிக்கிறாய் /
வீடெங்கும் வண்ணங்களான
சாமி படங்களை மாட்டுகிறாய் /
உயிருள்ள ஓவியமாய்
மூச்சு விடும் காவியமாய் /
உனக்காகவே உயிர்
கொடுத்திடும் தெய்வமாய் /
கண்ணாகவே உனைப்
கார்த்திடும் கடவுளாய் /
கூடவே இருந்திடும்
பெற்றோரை மறந்திடுகிறாய் /
வாழ்வும் வளமாகும்
பெற்றோரை வணங்கிடவே /
No comments:
Post a Comment