Sunday, 1 September 2024

வாழ்வும் வளமாகும் 
பெற்றோரை வணங்கிடவே.
************************--******

சிலையின் முன் நின்று 
தலைக்கு மேல் இருகரம் ஏற்றி 
ஏதேதோ புலம்புகிறாய்/

வடக்குத் திசைப் பார்த்துப்
பன்னீர் தெளிக்கிறாய்/
கிழக்கை நோக்கிப் 
பூக்கள் குவிக்கிறாய் /
வீடெங்கும் வண்ணங்களான 
சாமி படங்களை மாட்டுகிறாய் /

உயிருள்ள ஓவியமாய் 
மூச்சு விடும் காவியமாய் /
உனக்காகவே உயிர் 
கொடுத்திடும் தெய்வமாய் /

கண்ணாகவே உனைப்
கார்த்திடும் கடவுளாய் /
கூடவே இருந்திடும் 
பெற்றோரை மறந்திடுகிறாய் /
வாழ்வும் வளமாகும் 
பெற்றோரை வணங்கிடவே /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment