#ஆணும் #பெண்ணும்
#நிகரெனக் #கொள்வோம்.
*******************************
ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வோம் /
அவளும் நாமும்
ஓருயிரெனச் சொல்வோம் /
சரித்திரம் படைத்திட
இடம் கொடுத்திடுவோம்/
விசித்திரங்கள் பல
இணைந்தே படைத்திடுவோம் /
பாரதம் போற்றும்
பாரதியின் கூற்றை/
பாவையர் எல்லோரும்
மனதால் வெல்லட்டும் /
அடுப்படியோடு முடங்கும்
எண்ணத்தை மெல்லட்டும்/
கற்றலிலும் காற்றலிலும்
ஓங்கியே துள்ளட்டும்/
ஏங்கியவளோ உள்ளத்தில்
இன்பத்தை அள்ளட்டும்/
ஆர் எஸ் கலா