Monday, 27 May 2024

நீயே என் உலகமடா
************************
நோக்கும் வேளையில் முகம் 
சுழிக்கிறாய்/
தேடி வந்தால் பேச்சைக் 
குறைக்கிறாய்/

சாடிக்குள் மலராக வாடிக்
கிடக்கிறேன் /
கேடியின்  நெஞ்சத்தை நாடி
நிக்கிறேன் /

ஏனோ என்னை நெரிந்தியாய்ப்
பார்க்கிறாய் /
தானே நானும் வருந்தியே
துடிக்கிறேன் /

நோகும் உள்ளத்திற்கு மருந்தாய்
வருவாயோ/
காவு கொள்ளும் நோயாய் 
மாறுவாயோ/

மறந்து வாழ்ந்திடும் வாழ்வு
சாத்தியமில்லையடா/
சத்தியமாய்  நீயே என் 
உலகமடா/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment