சிறுபிள்ளையானாலும்
நறுக்கெனக் கேள்வி தொடுத்தால்.
திடுக்கிட்டு நிமிர்ந்திடச்
செய்திடும் நேரமும் உண்டு .
ஊழல் செய்து ஊதியம்
பெற்றிடாத .
கிராமசேவகர் இருக்கும் ஊரில் .
கைப்பிள்ளை கால்பிள்ளை
வைத்திருப்பதில்லை.
கடமை எண்ணும் பெயரில்
மடமையான செயலில் இறங்கி மூக்கறுபட்டு போவதுமில்லை.
அமைதி காப்போரெல்லாம்
அறியாமையின் இருப்பிடமில்லை.
தகாத வார்த்தையை உரைத்து
சாதித்திட நினைப்பதுமில்லை.
தக்க நேரத்தில் தகுதியான வார்த்தைகளையும் .
தகுதியான ஆதாரங்களையும்.
முன் நிறுத்தி சாதிக்கும் வல்லமை
பெற்றவர்களும் கிராமங்களில்
வசிப்பார்கள் என்பதே உண்மை.😏
No comments:
Post a Comment