Friday, 17 May 2024

கிராமங்களில்

சிறுபிள்ளையானாலும்
நறுக்கெனக் கேள்வி தொடுத்தால். 
திடுக்கிட்டு நிமிர்ந்திடச்
 செய்திடும் நேரமும் உண்டு .

ஊழல் செய்து ஊதியம்
பெற்றிடாத .
கிராமசேவகர் இருக்கும் ஊரில் .
கைப்பிள்ளை கால்பிள்ளை 
வைத்திருப்பதில்லை.

கடமை எண்ணும் பெயரில்
மடமையான செயலில் இறங்கி மூக்கறுபட்டு போவதுமில்லை.

அமைதி காப்போரெல்லாம் 
அறியாமையின் இருப்பிடமில்லை.
தகாத வார்த்தையை உரைத்து 
சாதித்திட நினைப்பதுமில்லை.

தக்க நேரத்தில் தகுதியான வார்த்தைகளையும் .
தகுதியான ஆதாரங்களையும்.
முன் நிறுத்தி சாதிக்கும் வல்லமை
பெற்றவர்களும் கிராமங்களில் 
வசிப்பார்கள் என்பதே உண்மை.😏

No comments:

Post a Comment