நாணியது பெண்ணோ
****************************
நாணியது பெண்ணோ
நாவற்பழக் கண்ணோ/
நளினம் கொண்ட இளைய
மங்கையே/
நான் பாதம் நனைத்திடாத
கங்கையே/
நாளும் பொழுதும்
சுவைத்திடலாமோ தேனே/
அல்லியாய் மலர்ந்து
மல்லியாய் மயக்கியவளே/
அத்தராத்திரியிலும் கள்ளியே
நீ விழித்திரு/
அருந்திய மதுவாய்
விருந்துக்குக் காத்திரு/
அரும்பு மீசைக்காரன்
நெருங்கையிலே பஞ்சாயிரு/
கிறுக்கன் என்
கிறுக்கள்களைப் பார்த்து/
சிறுக்கியவளும் சிரிக்கையிலே
சிதறியது முத்தோ/
No comments:
Post a Comment