Friday, 17 May 2024

பாரியின் சபதம்


கண்ணகி வீட்டுத் தெரு முனையில்
காக்கா புடிச்ச கருவாச்சி /
நாக்கைப்  புரட்டிப் போட்டு
வார்த்தையை உருட்டி விட்டாள் /
வந்து விழுந்துச்சு காதிலே
அருவா முனையாட்டம் /

திக்கெட்டுப் போனேன் நானும்/
வெக்குண்டு போனார்
கூட்டிக்கிட்டுப் போன மாமனாரும் /

வாயாடி எம்புட்டு பேசிப்புட்டா /
சிம்பட்டு சின்ன மாமியாரோ 
என்னைய நோக்கி கும்பிட்டு 
வழி இனுப்பி வச்சிப்புட்டா /

நொங்குக் கண்ணுக் காரி
இங்கிட்டு வாடி/
மங்கிக்காத பொன் தாலியாலே
நங்கூரம் போட்டுக்கிறேன் 
உன்னைய  வாரி /

அப்புறமா பார்த்துக்கோடி 
ஒன்னோட வாழ்க்கையோ சேரி /
என்னோட காட்டில்  மாரி /
இத்தனையும் நடத்திக் 
காட்டிக்குவான் இந்த பயப்புள்ள பாரி/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment