உரக்க உண்மையை உரைப்பவன்
வெறுக்கப் படுகிறான்/
உரையிலே பொய்மையைத்
திணிப்பவன் போற்றப் படுகிறான்/
ஊருக்கு நன்மை
நினைப்போரெல்லாம்
துரத்தப் படுகிறான்/
ஊரையே அடித்து உலையில்
போடத் துடிப்பவர்களோடு
கொண்டாட்டம் போடுகிறான்/
பொல்லாத உலகிலே
சொல்லயிலாத விடையங்கள் எத்தனையோ உண்டு /
அத்தனையும் சொல்லி விட்டால்
மொத்தமாய் மொத்தும்
ஊரெல்லாம் இணைந்து/
பக்தனாய் வாழ்வான்
சித்தனாய் வாழ்வான் .
முற்றும் திறந்த
முனிவனாய் வாழ்வான்/
சுதாரித்துக் கொஞ்சம்
கவனித்துப் பார்
சுத்தமற்ற வாழ்க்கையின்
கருத்துக் கணிப்பின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பான்/
பத்துக்குப் பத்து போலி முகம்
ஆனாலும் பக்கத்தில் நோக்கையிலே கணிசமாய் மறைக்கிறது
அவது திறமையான நடித்திடும் குணம்/
(இவை பெண்ணுக்கும் பொருந்தும்😏)
No comments:
Post a Comment