Friday, 17 May 2024

ஊருக்கு நன்மை

உரக்க உண்மையை உரைப்பவன் 
வெறுக்கப் படுகிறான்/
உரையிலே பொய்மையைத் 
திணிப்பவன் போற்றப் படுகிறான்/

ஊருக்கு நன்மை 
நினைப்போரெல்லாம்
துரத்தப் படுகிறான்/
ஊரையே அடித்து உலையில் 
போடத் துடிப்பவர்களோடு
 கொண்டாட்டம் போடுகிறான்/

பொல்லாத உலகிலே 
சொல்லயிலாத விடையங்கள் எத்தனையோ உண்டு /
அத்தனையும் சொல்லி விட்டால்
மொத்தமாய் மொத்தும்
 ஊரெல்லாம் இணைந்து/

பக்தனாய் வாழ்வான் 
சித்தனாய் வாழ்வான் .
முற்றும் திறந்த 
முனிவனாய் வாழ்வான்/

சுதாரித்துக் கொஞ்சம் 
கவனித்துப் பார் 
சுத்தமற்ற வாழ்க்கையின் 
கருத்துக் கணிப்பின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பான்/ 

பத்துக்குப் பத்து போலி முகம் 
ஆனாலும் பக்கத்தில் நோக்கையிலே கணிசமாய் மறைக்கிறது 
அவது திறமையான  நடித்திடும் குணம்/

(இவை பெண்ணுக்கும் பொருந்தும்😏) 


No comments:

Post a Comment