Monday, 16 December 2024
Thursday, 21 November 2024
Friday, 27 September 2024
Friday, 20 September 2024
உனக்கென மட்டும்
வாழும் இதயமடா(டி).
::::::::::::::::::::::::::::::::::::::::::
உயிரென நினைத்தேன்
உள்ளத்தைக் கொடுத்தேன்/
உறவெனக் கண்டேன்
உதிரத்தில் இணைத்தேன்/
உறங்கிட இதயத்தையே
உறைவிடமாய் அளித்தேன்/
உணர்வுக்குள் விதைத்தேன்
உணர்ச்சியால் ரசித்தேன் /
உனக்கும் எனக்குமான
உதயமென மகிழ்ந்தேன்/
உல்லாசமாய் மலர்ந்தேன்
உதிரிப்பூவாய் இருந்தேன் /
உசுப்பேத்தியே கைப்பிடித்தாய்
உதறியே கதறடிக்காய்/
உச்சத்தில் துயரேற்றினாய்
உச்சரிப்பில் வலியேற்றினாய் /
உண்மையைக் கூறினால்
உணர்ந்திடுவாயோ என்னில் /
உனக்கென மட்டும் வாழும் இதயமடா(டி)/
உற்சாகமும் சோர்வும்
உன்னால் ஆனவையெடா/
உற்றுழியாய்க் கொல்லுவதை
உற்றுத்தான் பாருடா (டி)./
Thursday, 12 September 2024
மையலிலே தவிக்கிறேன்
*****************************
மையலிலே தவிக்கிறேன்
மையிட்டவளைத் தேடுகிறேன்/
பூங்குயிலே கேளாயோ
பூமகளே வாராயோ/
தேனருவியாய் விழுந்திடு/
தேன்மொழியில் பேசிவிடு/
காதோரம் கூறிடுவாயோ
காதலோடு கவிதைகளும்/
பார்த்து ஓயவில்லை
பாத்திடும் பணியும் தீரவில்லை/
சேகரித்தேன் கற்பனையை
சேதாரமாகிது அத்தனையும் /
நாளும் பொழுதும்
நானும் ஓடானேன்/
யாசகம் தேடிடவே
யாழினியே தயாரானேன்/
வேதனையில் நூலானேன்
துக்கத்தில் சருகானேன்/
பக்கத்தில் நீயிருந்தால்
கைகளுக்கு மலராவேன் /
மைனாவே வந்திடுவாயோ
இல்லை மறுத்திடுவாயோ?
மாமனோட முகங்காண
மைவிழியே தயக்கமேனோ/
Sunday, 1 September 2024
வாழ்வும் வளமாகும்
பெற்றோரை வணங்கிடவே.
************************--******
சிலையின் முன் நின்று
தலைக்கு மேல் இருகரம் ஏற்றி
ஏதேதோ புலம்புகிறாய்/
வடக்குத் திசைப் பார்த்துப்
பன்னீர் தெளிக்கிறாய்/
கிழக்கை நோக்கிப்
பூக்கள் குவிக்கிறாய் /
வீடெங்கும் வண்ணங்களான
சாமி படங்களை மாட்டுகிறாய் /
உயிருள்ள ஓவியமாய்
மூச்சு விடும் காவியமாய் /
உனக்காகவே உயிர்
கொடுத்திடும் தெய்வமாய் /
கண்ணாகவே உனைப்
கார்த்திடும் கடவுளாய் /
கூடவே இருந்திடும்
பெற்றோரை மறந்திடுகிறாய் /
வாழ்வும் வளமாகும்
பெற்றோரை வணங்கிடவே /
Wednesday, 21 August 2024
புதுக்கவிதை
கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா.
*************************
கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா?
நினைவைத் தின்றவளே
நித்திரைக்குமுன் நிற்பாயா?
பசியைக் கலைத்தவளே
புசித்திடவே அழைப்பாயா?
பருவம் உணர்த்தியவளே
புருவம் திறந்திடுவாயா?
உளறல் கொடுத்தவளே
உள்ளத்தைத் தருவாயா?
உயிரைக் குடிப்பவளே
உயிரோடு இணைந்திடுவாயா?
ஏங்கித்தவித்திடச் செய்தவளே
ஏக்கம் கரைத்திடுவாயா?
ஏகாந்தமான என்னவளே
ஏமாற்றம் கொடுத்திடுவாயா?
காத்திருக்கச் செய்திடுவாயா?
சேர்த்தணைக்க இணங்கிடுவாயா?
திரையிட்டு மறைத்திடாமல்
முறையொன்றோடு வந்திடுவாயா?
Subscribe to:
Posts (Atom)