Tuesday 30 August 2022

வேற்றுமை போக்கிடு

அழிந்து வரும் தமிழர் 
கலாச்சாரத்தைக் காத்திடு. 
அறியாத கலாச்சாரத்தைக் கற்று விடு. நீ அறிந்தவையை பலருக்கு போதித்து விடு. உன் அறிவினையைக் கொண்டு 
அதை வளர்த்து விடு .....!

பண்டைக்கால உணவை மறவாதிரு. 
கண்ட கண்ட உணவை உண்ணாதிரு. பண்டம் மாற்றும் வியாபாரத்தை அருந்திரு. பண்பாடு மறக்காமல் வாழ்ந்திரு .....!

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திடு. 
வாழும் போதே பல காரியத்தை நிறைவேற்றிடு. 
வழி தவறியவர்களை திருத்த முயன்றிடு. வயது வரம்பறிந்து உரையாற்றவே கற்றிடு ....!

தொல்லைகளைக் கண்டால் நகர்ந்திரு. வெற்றியின் எல்லையை சேர்ந்திரு. சிந்தனைச் சிகரமாக முயற்சித்திரு.
சிறப்புக்கள் பல கண்டு மகிழ்ந்திரு .....!

உலக மாற்றத்தை நங்கு உணர்ந்திடு. 
உதவும் குணத்தை வளர்த்திடு. 
ஒரே இனம் நாம் மனித இனம் 
என்று போற்றிடு 
வேற்றுமை கொள்வோரை எதிர்த்திடு.....!!

            

No comments:

Post a Comment