Monday 8 August 2022

என்னுயிர் போய் விட
எத்தனை யுகமாகிடுமோ இல்லை
இந்நொடியே  மாண்டிடுவேனோ
நான் அறியேன் கண்மணியே.

இறக்கும் வரை எனது
கண் மணிக்குள் உன் ஒளியே 
எனது கரம் தவறவட்ட சின்ன மணியே.

என் விழிகளுக்குள் 
நித்தமும் மழைத்துளியே
அத்துளியிலே முளையிடுன்கிறது
நெஞ்சத்திலே கொலைவெறியே
இருப்பினும் கொல்லும் நோக்கம்
என்னில் இல்லையடா  கண்மணியே .

உன்னைக் கொன்று கொள்ளையிட்டவர்
துன்பத்தில் தவிர்த்து தெள்ளாகத் துடித்து
வெளியே சொல்லாது துயரத்தை மென்று
தன்னைத் தானே மாய்த்திடும் வரை
அடியும் பிடியும் தடியும் எமக்குத் தேவையில்லையடா கண்மணியே.

விடியும் ஒவ்வொரு பொழுதும்
எனக்காகவும் விடிந்திடும் 
என்னும் நம்பிக்கையில் 
தேடிச் சென்று  இறைவனிடம்
பிராத்தனையின் பிடியில் நகர்ந்து
நாளைக் கழித்திடுவேனடா கண்மணியே.

 

No comments:

Post a Comment