Friday 19 August 2022

பூ பொலிவு அழகு
*******************
பூவோடு ஒப்பிட்டேன்
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள்  //

பொலிந்த சிலையாய்
மெலிந்து நின்றாள்  //
பொழியும் மழையில்
மெய்மறந்து சென்றாள் //

அழகு ஓவியமாய்
என்னைக் கவர்ந்தாள் //
ஆழியலையாய்   வந்து
நெஞ்சத்தில்  அமர்ந்தாள்//

பூத்த காதல்
சொட்டுது தேனாய் //
பொலிவு  கொடுக்கிறது
கவிதையும்  தானாய் //


No comments:

Post a Comment