பூ பொலிவு அழகு
*******************
பூவோடு ஒப்பிட்டேன் 
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள்  //
பொலிந்த சிலையாய் 
மெலிந்து நின்றாள்  //
பொழியும் மழையில்
மெய்மறந்து சென்றாள் //
அழகு ஓவியமாய்
என்னைக் கவர்ந்தாள் //
ஆழியலையாய்   வந்து
நெஞ்சத்தில்  அமர்ந்தாள்//
பூத்த காதல் 
சொட்டுது தேனாய் //
பொலிவு  கொடுக்கிறது 
கவிதையும்  தானாய் //
  
No comments:
Post a Comment