பூ பொலிவு அழகு
*******************
பூவோடு ஒப்பிட்டேன்
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள் //
பொலிந்த சிலையாய்
மெலிந்து நின்றாள் //
பொழியும் மழையில்
மெய்மறந்து சென்றாள் //
அழகு ஓவியமாய்
என்னைக் கவர்ந்தாள் //
ஆழியலையாய் வந்து
நெஞ்சத்தில் அமர்ந்தாள்//
பூத்த காதல்
சொட்டுது தேனாய் //
பொலிவு கொடுக்கிறது
கவிதையும் தானாய் //
No comments:
Post a Comment