வளர்த்து விட்ட கைகளை
விலத்தி விட்டுப் போவோரும்.
வளரும் போதே
துணையாக இருந்தவர்களை
வளர்ந்த பின்னே தூக்கி
வீசி விட்டுப் போவோரும்.
ஆதியிலே இருந்த உறவை
பாதியிலே துரத்தி விடுவோரும்.
ஆள் சேகரிப்புக்காக மட்டும்
கூடவே வைத்திருப்போரும்.
பெரும் பெரும் புள்ளிகள்
நெருங்கிய பின்னே.
முன்பு வந்த காதை
பின்பு வந்த கொம்பு
மறைப்பது போன்று நடப்போரும்.
சுயநலவாதிகளின் பட்டியலில்
முதலிடம் பெறுவோர்.
No comments:
Post a Comment