பொல்லாத மனசு பொங்குது மாமா
***************************************
மாமோய் நீ அள்ளாத ஏக்கம்
தாக்கியதால். /
சொல்லாத காதல் கிள்ளுது
ஆமா /
நில்லாமல் தாகம் உன்னைத் தேடுது
மாமா /
புல்லாக நானும் நின்று வாடுறேன்
ஆமா /
அட ஊற்றெடுக்கும் ஆசை ஊர்ருது
ராமா/
சேர்த்தணைக் விரைந்து வந்திடு
ராமா/
பார்த்திட விழி தினம் நோக்குது வழி
ராமா/
ஆற்று வழியே வந்து காட்டிடு முகம்
ராமா /
திறந்த இதயம் பரப்புது சூடு
ஏனோ?
பிறக்கும் மோகம் இறகு விரிக்கிறதே
அது தானோ?
சுரக்கும் வியர்வை நனைக்குது உடலை வீணா /
கடந்திடும் நாட்கள் கொடுக்குது துயரக்
கனா /
நடக்காத விளையாட்டுக்கு நெஞ்சம்
கேட்குது பன்னீர் /
தொடுக்காத விரல்கள் தொடைக்குது கண்ணீர்/
நீதானே என்னுடலோடு கலந்தோடும்
செந்நீர் /
இன்னும் மௌனம் தேவை தானா
மாமா/
நெல்லா கல்லா முள்ளா உன் மனசு
மாமா/
எரியும் அடுப்பில் ஏற்றிய கொதி நீராய் இன்னும்/
பொல்லாத யென் மனசு பொங்குது
மாமா/
No comments:
Post a Comment