Friday, 19 June 2026

கட்டூரை

மொழி இல்லாத நட்பு 
****************************
 தியாவின் உணர்ச்சி கதை
********************************
 ஒரு வெளிநாட்டு இளைஞனும் 
தமிழ் பெண்ணும் சந்தித்த மௌன பாசம்.
இன்றைய வேகமான உலகத்தில் மனிதர்கள் பேசினாலும், பல நேரங்களில் உணர்வுகள் பேசப்படாமல் போய்விடுகிறது.

 அதையே அழகாக சொல்கிறது #எதன் மற்றும் #தியா என்ற இருவரின் நட்பு கதை.

ஒரு சாதாரண விமான நிலைய சந்திப்பில் தொடங்குகிறது இந்த உறவு. 
மொழி தெரியாத இரண்டு மனிதர்கள்—ஒருவர் தமிழ் பெண், மற்றவர் வெளிநாட்டு இளைஞன் #எதன். வார்த்தைகள் இல்லாமல் ஒரு சின்ன உதவி மூலம் ஆரம்பிக்கும் அவர்களின் சந்திப்பு, மெதுவாக ஆழமான உணர்வாக மாறுகிறது.

#எதரனுக்கான கடந்த காலம் மிகவும் இருண்டதானாது அவர் ஒரு ரெஸ்க்யூ குழுவில் இருந்தவர். ஒரு தவறான நிகழ்வு அவரை குற்ற உணர்ச்சியிலும், வலியிலும் மூழ்கச் செய்கிறது. 
அதனால் அவர் தன்னை மறைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் #தியா அவனை “புரிந்துகொள்ள முயலும் ஒருவராக” மட்டுமல்லாமல், “அவனை ஏற்றுக்கொள்ளும் ஒருவராக” மாறுகிறார். அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் #எதனு-க்கு ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது.

ஒரு கட்டத்தில் #எதன் தனது கடந்த காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை வருகிறது. நிழல் மனிதன் மூலம் உண்மை வெளிப்படுகிறது. #எதன்  ஓடாமல் நின்று, தனது தவறுகளையும் உணர்வுகளையும் ஏற்றுக்கொள்கிறான்.

#தியாவின் நம்பிக்கை மற்றும் ஆதரவு #எதனு-க்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கிறது. இறுதியில் அவர் கூறும் ஒரு வரி முழு கதையையும் சுருக்குகிறது:
நான் ஓடவில்லை… நான் என்னை கண்டுபிடித்தேன்.”

 முடிவு சிந்தனை
இந்தக் கதை நமக்கு சொல்லுவது ஒன்று தான்—
 உண்மையான நட்புக்கு  மொழி தேவைப்படாது
 மனிதர்களை காப்பாற்றுவது சில நேரங்களில் மருந்தோ ஆயுதமோ அல்ல… ஒரு நம்பிக்கையான மனசு தான்.

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment