(#ர முதல் எழுத்துக் கவிதை)
ரகசியமாகக் கனவில்
நுழைந்த சிலை/
ரதி தேவி வடிவான கலை/
ரம்பம் கொண்டு அறுக்கும்
விழிகள்/
ரம்புட்டான் கனி போன்ற
இமைகள்/
ரத்தினம் போன்று யொளிக்கும்
பற்கள்/
ரவா லட்டாக சுவையூட்டும்
பார்வை/
ரங்கோலி கட்டிய சின்னக்
குயில்/
ரம்பை வடிவான பெண்
மயில் /
ரதியே என் கண்ணிலே
நிறைந்தாயடி/
ரஞ்சினி ராகினி மோகினி
நீயாரடி?
தேர்வுக்கு நன்றி😊
No comments:
Post a Comment