Thursday 14 January 2021

என்னுயிர் சுவாசமே


பேருந்துப் பயணத்திலே
முன்னிருக்கை அமர்ந்தவளே /
பேரழகைக் காட்டி 
பேரதிர்ச்சி கொடுத்தவளே /

பாவாடை தாவணியிலே
பாராமல் போனவளே /
பாவியென் நெஞ்சத்தைக்
கிள்ளிச் சென்றவளே/

துள்ளிடும் ஆசைகளோ 
உலாவுதடி சின்னவளே/
துரத்திடும் ஏக்கமும்
எனையிறுக்குதடி என்னவளே/

கண்ணால் பறித்தெடுத்து
மனதினிலே விதைத்தேனடி /
கண்ணீர் ஊற்றியே
மரமாக வளர்த்தேனடி/

காலமும் கடப்பதினால்
கவலையும் பிறக்கின்றதடி /
பேச்சு இழந்து 
மூச்சடைச்சுப் போகையிலும்/

காற்றைத் துரத்தி 
உன்னைக் காத்திருக்கேனடி/
உடலோடு கலந்திடு
என்னுயிர் சுவாசமே/


No comments:

Post a Comment