Tuesday 15 September 2020

பருவக் காற்று

#ஓவியக்கவிதை
*******************

வயசுக்குப் பசி தீர்க்க
மனதாரத் தழுவி .
உடலுக்குச் சூடு ஏற்றி.
உள்ளத்தில் காமத் தீ மூட்டி .
உணர்வைக் கொண்டு சிறையில் பூட்டி
உணர்ச்சியை விடுவித்து 
உலாவிடும் பாதையைக் காட்டி./

பின்னிய நரம்பில் நெஞ்சம் எண்ணியவையெல்லாம் செலுத்தி.
வெப்ப மூச்சு வீசையிலே 
அச்சம் கொள்வாயா? 
என்று வினா எழுப்பி 
ஓடும் குருதியை நிறுத்தி 
உறுதிமொழி எடுத்து./

கணை தொடுத்திடும் கண்களுக்கு 
பஞ்சணை மயக்கப் பட்டம் பெற்று
பூவாக நான் மலர்ந்து .
பொன்வண்டாக உன்னை அழைக்க  
உன் இதழ் கொண்டு எனை நீ அளந்து.

 இன்புறும் வேளையிலே 
நெஞ்சணை எடை கொண்டு 
உன்னை நான் எடை பாத்திட 
வேண்டும் என்று பருவக் காற்று 
பரிசம் போட்டுச்  சென்றதடா நேற்று./

(ஓவியருக்கு வாழ்த்துகள்)
கிளுகிளுப்புக் கவிதை😜

No comments:

Post a Comment