Tuesday 15 September 2020

மனிதன்



மனமும் குணமும் 
மாறுவது மனிதனிடமே. 
முன்னாடி விட்டு பின்னாடி 
பேசுவதும் இந்த இனமே.

கூட்டி விட்டும் காட்டி விட்டும் 
கூடவே நின்று கை 
கொடுப்பதும் அந்த இனமே.

பகட்டு வாழ்வில் 
புரண்டு எழுந்து
முரட்டுத்தனமாய் நடப்பதும்
மானிடர் இனமே.

குடி கெடுப்பதும் குடியால் 
கெடுவதும்
மூட்டி விடுவதும் காட்டிக் 
கொடுப்பதும்
பழகும் போதே விசத்தைக் 
கலப்பதும்
பழகியவரின் முகத்தை 
முறிப்பதும்.

இத்தனையும் முற்றும் 
முழுமையாக
செய்து முடிக்கும் 
திறன் கொண்ட இனம் 
ஒரே ஒரு இனமே 
அது நம் இனமே.
உயிர் இனத்திலே 
மாறுபட்டவன்  இவனே.

(#மனிதன் #மனிதன் #மனிதன்) 


No comments:

Post a Comment