Tuesday 15 September 2020

இதற்குப் பெயர் தான் காதலா

#ஓவியக்கவிதை
******************


துடிக்கும் இதயம் தூண்டில் போடுகிறது.
படிக்கும் நாவு பாண்டி ஆடுகிறது.
விரட்டும் விழிகள் வெட்கப்படுகிறது.
அதட்டும் இதழ்கள் புன்னகை வீசுகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

நெஞ்சம் சல்லாபம் தேடுகிறது.
சங்கதியை கனவுக்குள் போடுகிறது.
உந்தன் ஞாபகம் நித்தம் நீளுகிறது.
எந்தன் ஞாபகம் முற்றாக ஓடுகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ...?

கறந்த பாலும் புளிக்கிறது.
அறுசுவை உணவும் கசக்கிறது.
இறுக்கிய இமையும் தூக்கம் மறக்கிறது.
நிறுத்திய நினைவும் எங்கங்கோ அலைகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ...?

இதயம் எங்கும் ஆசை பொங்குகிறது.
அங்கமெல்லாம் மோகம் தங்குகிறது.
வார்த்தையெல்லாம் தேனாய் இனிக்கிறது.
கற்பனையெல்லாம் கடல் கடக்கிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

தனிமையும் வெறுமையும் பிடிக்கிறது.
அதிலே தவிப்பும் துடிப்பும் கலக்கிறது.
தொலைந்ததாக மனம் நினைக்கிறது.
தொலைந்த நிலை  அறியாமல் முழிக்கிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

(ஓவியருக்கு வாழ்த்துகள்)


No comments:

Post a Comment