படிப்போருக்கும் ரசிப்போருக்கும்
இவை கவிதை வரிகள்./
புரிந்தோருக்கு இவை ஏக்கத்தின்
வரிகள்./
அறிந்தோருக்கு இது சோக வரிகள்./
எனக்கு உண்மை வரிகள்./
உனக்கு மட்டும் இவை சொந்த வரிகள்./
வலிகளில் பிறந்த. வரிகள்./
விழிகளில் நீர் நிறைந்த வரிகள்./
வெகுளிப் பெண்ணை
சிக்கிப் பிடித்த கவலை வரிகள்./
உன் புன்னகைக்குள் புதையுண்ட ஆத்மாவின் வரிகள்./
உன் அகத்தின் உள்ளே குடி ஏற
நாடி வரும் ஜீவனின் வரிகள்./
இன்பத்தால சுடர் ஏற்ற நினைத்து
ஏமாற்றத்தால் இருண்டு இருக்கும்
இதயவரிகள்./
இருந்தும் உன்னை தேடி வரும் படி_வரிகள்./
உன் கரமே துணை என ஓடி வரும் கொடி
வரிகள்.
நீர் இன்றி வாடும் செடி போல்
நீ இன்றி வாடும் என் வரிகள்./
உன் காந்தப் பார்வையில்
ஒட்டித் தவிக்கும் வரிகள்./
காலமெல்லாம் உன்னை
சிக்கெனப் பிடிக்க நினைத்த வரிகள்./
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
காவியம் படைத்த வரிகள்./
No comments:
Post a Comment