Monday 17 August 2020

பொல்லாத சமூதாயம்

இனிக்க இனிக்கப் 
பேசுவோர் எல்லாம் 
இதயத்தில் நம்மை 
வைத்திருப்பதில்லை.

நெருங்கி நெருங்கி 
வருவோர் எல்லாம்
நெஞ்சத்தில் ஏற்றுவதில்லை.

முன்னும் பின்னும் 
பார்த்து விட்டு.
உதட்டோரம் 
புன்னகையை வீசி விட்டு.

முன்னாடி சென்ற பின்னே
பின்னாடி ஏதேதோ 
கதைகளைக் கட்டி விட்டு.

வஞ்சகம் சூது விதைப்பார்கள்.
காழ்புணர்ச்சி பொறாமை
வளர்ப்பார்கள்.

பில்லி சூனியம் வைப்பார்கள்.
ஏவல் பிசாசுகளை
அழைத்து விடுவார்கள்.

அடுத்தவன் வாழ்வின் 
மேல் அக்கறை 
கொள்வதாய் நடிப்பார்கள் .
நோட்டமிட்டு அந்தக் 
குடியைக் கெடுப்பார்கள்.

எதிரி எதிரே நிற்பான் 
துரோகி கூடவே நிற்பான் 
கூடியே நடப்பான்  
நம் வாழ்வுக்குக் குழி 
போட்டு முடிக்கும் 
வரை  விழிக்குள்ளே 
நம்மை வைத்திருப்பான் .😡


No comments:

Post a Comment