Tuesday 25 August 2020

தூக்கம் தவறிய இரவுகள்



விண்ணில் நிலவு மண்ணை 
நோக்கிய படி உலாவையிலே 
எண்ணற்ற மகிழ்வோடு
குடும்பமே திண்ணையிலே 
உறங்கும் வேளையிலே.....///

இரைச்சலோ சிறு விமானம் 
இறக்கியதே பல வெடிகள் 
இருண்டது இன்பம் எழுந்தது 
இறைவா என்னும் ஓலம்....///

சிதறியது குடும்பம் வாரிச் 
சுருட்டியபடி திசை அறியாமல் 
கால்கள் எடுத்தது ஓட்டம். 
காடு மேடு கடக்கையிலே 
இரவுத் தூக்கம் ஏது....///

கண்ணும் கருத்துமாக 
வளர்த்த பிள்ளை தவறிய 
பின் கண்ணில் உறக்கம் ஏது 
தவிப்போடும் துடிப்போடும் 
பயத்தோடும் ஓடும் போது 
தூக்கம் என்பது ஏது  தூக்கம் 
மறந்த இரவுகள் ஏராளம்.....///

பசியில் வதங்கியே 
வயிறும் குடலும் எரியும் 
போது தேடி வருமோ 
விழியில் தூக்கம்....///

     

No comments:

Post a Comment