Thursday 8 September 2022

என்னுயிர் மன்னவா
*******************

உள்ளம் கொள்ளையிட்ட அழகிய தமிழ்மகனே/
உணர்ச்சியை தூண்டி விட்ட 
கள்வனே/
உயிரோடு கலந்திட வந்த 
சின்னவனே/
ஊசிக்கு நூலாக இணைந்திடு 
நாயகனே/

இறந்த மூங்கில் இசைப்பது 
போல்/
வாடிய தாழம்பூ மணப்பது 
போல்/
அறுந்த சலங்கை ஓசையிடுவது 
போல்/
விழுந்த விதை செடியாவது 
போல்/

பிடிவாதம் வேண்டாம்  என்னுயிர்
மன்னவா/

இணைந்தே வாழ்ந்திடுவேன் 
நீ வாவா/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment