Saturday 3 September 2022

பொய்மை

பூவின் மென்மை  
பாசத்தின் உண்மை 
அள்ளி அணைத்திடும் தாய்மை 
பெண்மை உயர்மை 
என்றெல்லாம் 
சொல்லிடும் வார்த்தையில்
மறைவில் நிறைந்தே 
கிடக்கின்றது பொய்மை.

பெண்களில்-
நாசக் காரியும் உண்டு.
மோசக் காரியும் உண்டு.
வேசக் காரியும் உண்டு. 
இறப்பை ரசித்திடும் 
காந்தாரியும் உண்டு. 

கொன்று இன்பம் காணும்
அரக்கியும் உண்டு.
பசி தீர்க்க பிசச்சை பாத்திரம் 
ஏந்திடும் பத்தினியும் உண்டு.

பகட்டு வாழ்வுக்கு கட்டியவனை 
பலி கொடுத்து பலரது படுக்கை 
அறை தேடி வாழ்ந்திடுவோரும் 
சிலர் இல்லை பலர் உண்டு.

ஆளை மாற்றிக் கொண்டே 
ஆண்களை வலைத்துப் போடும்
அழகான பெண்கள் ஏராளம் தாராளம்.
அதனை சொல்லிப் புட்டா நம்மைத் 
தாக்கிடும்  வெட்கம் கொண்டு.

போற்றப் படும் தாய்க் குலம் 
எத்தனையோ உண்டு.
அத்தனையும் இணைக்கவில்லை 
நான்  இங்கே கொண்டு.
அசிங்கத்தோடு அழகை இணைத்தால் 
அழகிக்கும் மதிப்பற்றுப் போயிடும்
என எண்ணம் கொண்டு.

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment