Sunday 1 May 2016

வாழ்க்கை வரமா சாபமா???

வாழ்க்கை ....வரமா? சாபமா? ஆராய்ச்சியில்
இறங்கியோர் பலர் இன்று இல்லை
வாழ்க்கை ....வரம் என ஆணித்தனமாக
சொல்லும் மனிதர்களும் இல்லை
வாழ்க்கை ... சாபம் தான் என்று சட்டசபையில்
ஓங்கி குரல் ஒலிக்கவும் இல்லை
வாழ்க்கை ...என்பதை இறுதி வரை வாழ்ந்து
முடிக்கலாம் என உறுதி மொழியும் இல்லை.

வாழ்க்கையை ... எப்படியும் வாழலாம்
என்பவனுக்கு வரம்.
வாழ்க்கை ..... என்றால் இப்படித்தான்
வாழ வேண்டும் என்பவனுக்கு சாபம்.
வாழ்க்கைக்கு..... வரை அறை
வகுத்து வாழ்வபனுக்கு அது இன்பம்.
வாழ்க்கையில் ... வலிகளை
சுமப்பவனுக்கு அது துன்பம்.

வாழ்க்கையிலே ... சாதித்துப்பார்
சாதனையை யோசித்துப் பார்.
வாழ்க்கை .... வரம் எனப் புரியும்
அழகாய் தெரியும்.

வாழ்க்கையில் .. எல்லாம்
அனுபவிப்பவனுக்கு அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ....நல்ல நட்பின்
உறவு கிடைத்தால் அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ..நினைப்பதெல்லாம்
நடந்து முடிந்தால்.அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ...நமக்கு என்று ஓர் இடம்
மக்கள் மனதில் கிடைத்தால் அது
சொர்க்கமோ சொர்க்கம்.

வாழ்க்கையில் ...நினைப்பது
ஒன்று நடப்பது ஒன்றாக அமைந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோகமே நிரந்தரம்
என்றால்அது துக்கம் .
வாழ்க்கையில் ...விரத்தி துரத்தி
வந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோதனையே தொடர்
கதையானால் அது துக்கம் .
வாழ்கையில் ... அனைத்தும் கிடைத்து
பிள்ளை செல்வம் கிடைக்கா
விட்டால் துக்கத்தின் மேல் துக்கம்.

வாழ்க்கை .... வரம் என்பான்
துன்பம் நெருங்காதவன்
வாழ்க்கை .... சாபம் என்பான்
வேதனையில் மூழ்கிப்போனவன்.

வாழ்க்கை ....வரமா? மாபமா?
என்றால் விடிவு இல்லாச்
சாபம் முடிவு இல்லா வரம்.

வாழ்க்கைக்கு .. விடை தேடி
புறப்பட்டால் இறுதி வரை கிடைப்பது
கேள்விக்குறி போல்  நாமம் .

வாழ்க்கையில் ... நாம் பெற்ற வரம்
மனிதனாக பிறப்பு எடுத்த வரம் ஒன்றேதான்
என்பேன் நான்.......////

             

No comments:

Post a Comment