Sunday 1 May 2016

என்ன சொல்வேன்


போஞ்சி எதற்கு
பீஞ்சி எதற்கு
பரட்ட முடியல.......\

இந்தக் கஞ்சம்
புடிச்ச மாமனோடு
குடும்பம் நடத்த
முடியல...............\

பச்ச மிளகாய்
ஊசி மிளகாய்
காரம் ஏறல.........\

இந்த முருகன்
பத்தன் முறைப்பு
தாங்க முடியல........\

கதிரவன் சுடர் ஒளி
எரிவாயு தீப் பொறி
சூடு ஏறல............\

இந்த டாச்சர்
பிடித்த மாம்
தொல்லை தாங்க
முடியல...........\

வெங்காயம் நறுக்கி
பூண்டு அரைத்து
நான் கண்ணைக்
கசக்கல............\

இந்த வஞ்சம்
புடிச்ச மாமன்
போடும் கூத்து
சகிக்க முடியல.....\

மட்டன் போல்
வறுத்து எடுக்கான்
கருவாடு போல்
வாட்டி எடுக்கான்.......\

கோழிக் கொழம்பு
போல் கொதி
கொள்ளுது கோபம்
என்னுள்ளே..........\

பச்சரிசி சாதம்
போல் சிரித்து
நெய் விட்ட சாம்பார்
போல் வாசம் வீசி
இனிக்கும் பாயாசம்
போல் இனியைமான
வாழ்வாக வாழ்ந்த
பெண்மை நான்..........\

இன்று மண வாழ்வு
என்னும் பெயரில்
மாமா என்ற கை
விலங்கிடம் மாட்டி
வெயிலில் வாடும்
மலராட்டம் நீர் இல்லாம்
வெம்பும் வெள்ளரிப்
பிச்சு போல் வெம்பியே
போகின்றேன் விம்மியே
அழுகின்றேன்.............\

 

No comments:

Post a Comment