சோக்காளி என் மச்சான்.
சோக்காத்தான் சொக்க வைக்கான்.
சொக்கா போட்டு நடை போட்டான்.
சொக்கி நிற்கும் என்னை கண்ணாலே
எடைபோட்டான் .....////
வேளாண்மைக்கு போட்ட வேலி
தாண்டக் குதிக்கான் .
அத்து மீறி கட்டியணைக்கத் துடிக்கான்.
எல்லாமே எனக்கு அத்துப்படி என்று
சொல்லிச் சிரிக்கான் ...../////
கன்னம் சிவந்த பிள்ளை
கறுத்த மச்சம் பதித்தபிள்ளை
நல்ல செய்தி சொல்வேன் நில்லு பிள்ளை.
என்று நல்லாவே மச்சான் கதை
அளக்கான் ...../////
வாடி வாடி ரதியே வாங்கித்தருகிறேன்
ரோசாப்பூ ரவுக்கயடி என்றான்.
வாயாடி பெத்த மகளே வாயேன்டி
என்று கெஞ்சி நின்றான் .....///
மிஞ்சி போட நாள் பாரு மச்சான்
என்று வஞ்சி நான் நடை போட்டேன்
அங்கிருந்து சாக்கடித்தது சோக்காளி மச்சான்
நெஞ்சில் அவன் சிலையாகி
அங்கேயே நின்றான் .....////
No comments:
Post a Comment