அழகே உன்னை
ஆராதிக்கிறேன்.
*******************
விண்ணில் இருந்து
விழுந்த தாரகையா /
இல்லை மண்ணில்
மலர்ந்த தாமரையா /
என எண்ணி நித்தமும்
வியக்கிறேன் /
சத்தியமாக என்னுள்ளே
காதல் விதைக்கிறேன் /
இனியாள் உன்னையே
எப்பொழுதும் நினைக்கிறேன் /
கனியான இதழ்களைக்
கனவிலே சுவைக்கிறேன் /
பார்வையாலே அணைக்கிறேன்
விழிகளாலே அழைக்கிறேன் /
எந்நாளும் பார்த்துப் பார்த்து
ரசிக்கிறேன் /
துணைவனாக இணைந்திடவே
இராப்பகலாய்த் தவிக்கிறேன் /
அழகே உள்ளத்தால்
உன்னை ஆராதிக்கிறேன்/
No comments:
Post a Comment