Sunday 8 January 2023

கண்ணாலே பேசிப் 
பேசி கொல்லாதே./
*********************
ஊமை மொழிகளை 
உரைத்து முடிக்கின்றது/
கருமையிட்ட 
உமது இரு விழிகள்/

மேலும் கீழுமாய்
உருட்டி மிரட்டி /
ஓசையின்றி என்னை 
வீழ்த்தியது அவைகள்/

புன்னகை சிந்திடும் 
உன்னிதழ்களிலேஇன்னும்/
இன்சொல் ஒன்று 
உதிரலையே எதனாலே/

சொற்களைக் கொண்டு 
திணித்திடு காதினிலே/
வாழ்க்கை பூராவும் 
மகிழ்ந்திருப்பேன்அதனாலே/

வார்த்தைகளை மென்றும் 
விழுங்கியும்என்னாலும் /
கண்ணாலே 
பேசிப் பேசி கொல்லாதே/

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment