Thursday 26 November 2020

மாவீரர் தினம்

இதே மாதம்  ஈழத்தில் 
இரத்தோட்டம் கண்டு 
காட்டாறும் ஓடவில்லை.😢

மக்களின் கூக்குரல்
ஓங்கி ஒலித்தமையால்
கடலோசையும் கேட்கவில்லை.😢

மண்ணுக்கும் 
பசி எடுக்கவில்லை.
மடிந்த பிணம் கண்டு
பேதலித்தமையால்.😢

புகை மண்டலக் 
காட்சியிலே 
கருமேகம்  
தோன்றவில்லை.😢

குண்டு மழை 
ஒளியின் முன்னே 
கதிரொளியும் 
தென்படவில்லை.😢

பாதி உடலோடு
விழிகளும் 
பறி போனதால்.
பாதையும் 
அறிய முடியவில்லை.😢

மிதி படிகளாய்ப் போனது 
பகைவர்களுக்கு 
எத்தனையோ சடலங்கள்.😢

சாவின் விளிம்பிலும்
ஈழத்தின் ஏக்கம் 
சடுதியிலும் 
குருதியின் தேக்கம்.😢

எம்மை விட்டு 
என்று மாறும் 
அன்றையத் தாக்கம்.😢

கார்த்திகை என்றாலே
கறுப்பு நாளாகவே
நோக்குகின்றது 
ஈழத்து வாழ் கண்கள்😢.

(களிப்புற்று மகிழ்ந்த 
தாய்த் தேசத்து 
அந்நாள் அரசையும்
நினைவு கூர்வோம் 
இன்றைய நாளில்😡) 


No comments:

Post a Comment