இதே மாதம் ஈழத்தில்
இரத்தோட்டம் கண்டு
காட்டாறும் ஓடவில்லை.😢
மக்களின் கூக்குரல்
ஓங்கி ஒலித்தமையால்
கடலோசையும் கேட்கவில்லை.😢
மண்ணுக்கும்
பசி எடுக்கவில்லை.
மடிந்த பிணம் கண்டு
பேதலித்தமையால்.😢
புகை மண்டலக்
காட்சியிலே
கருமேகம்
தோன்றவில்லை.😢
குண்டு மழை
ஒளியின் முன்னே
கதிரொளியும்
தென்படவில்லை.😢
பாதி உடலோடு
விழிகளும்
பறி போனதால்.
பாதையும்
அறிய முடியவில்லை.😢
மிதி படிகளாய்ப் போனது
பகைவர்களுக்கு
எத்தனையோ சடலங்கள்.😢
சாவின் விளிம்பிலும்
ஈழத்தின் ஏக்கம்
சடுதியிலும்
குருதியின் தேக்கம்.😢
எம்மை விட்டு
என்று மாறும்
அன்றையத் தாக்கம்.😢
கார்த்திகை என்றாலே
கறுப்பு நாளாகவே
நோக்குகின்றது
ஈழத்து வாழ் கண்கள்😢.
(களிப்புற்று மகிழ்ந்த
தாய்த் தேசத்து
அந்நாள் அரசையும்
நினைவு கூர்வோம்
இன்றைய நாளில்😡)
No comments:
Post a Comment