Tuesday 17 November 2020

நீயும் பாரடா



 வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா / 
வீரியம் நிறைந்த 
பால் அருந்திய தமிழனடா/ 
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/ 
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைத்திட மாட்டானடா/ 

உயிரைத் துச்சமென நினைப்பானடா/ 
உயிர் கொடுத்து 
தமிழை மீட்கும் தோழனடா/ உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா / 
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/ 

அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/ 
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/ 
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/ அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/ 

எதிர்ச் சொல் உரைப்பானடா / 
எதிரியை எதிர்த்து நிற்பானடா / எரிமலையாய் வெடிப்பானடா / எருமைகளின் 
கோட்டையைத் தகர்ப்பானடா/

 நாடு காக்கத் துடிப்பானடா/ 
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/ 
நாளும் பொழுதும் நாங்கள் 
தமிழன் என்று உரக்கக் கூறும் 
வேளையிலே நீயும் பாரடா //

(#யாழ்சிறி  வானொலிக்காக
மாவீரர் தினம் அன்று எழுதியவை )


No comments:

Post a Comment