Thursday 29 October 2020

சொல் பெண்ணே சொல்

உன் -அங்கம் தொட்ட 
மழைத்துளிகளை எங்கும்
நகராமல் வங்கு அமைத்திடவா...?

நீ-பாதம் சலவை செய்த
ஓடைநீரை ஓட விடாமல் 
அடைப்புப் போட்டு விடவா...?

உமது -பொன்னான 
மேனியைப் படம் பிடித்த 
மன்னலை வரவழைத்து
கண்களால் கைது செய்திடவா ..?

உனது- கார்காலகக் கூந்தலை
தொட்டுக் கற்பழித்த 
வாடைக் காற்றை சாடியினுள்
இட்டு மூடிக் கொள்ளவா ..?

இல்லை -தேவியுமது அழகு 
கண்டு தேவலோகப் பக்தன்
பூ மழை தூவி  பாதம் 
தொட்டதாய் எண்ணி 
அனைத்தையும் விட்டு விடவா ..?

சொல் கண்ணே சொல்
செவ்விதழ் திறந்து 
செங்கரும்பின் 
சுவை போல் ஓர் சொல் 
சொல் பெண்ணே சொல்./


No comments:

Post a Comment