Wednesday 3 February 2021

காதல் வானிலே


உன்னிதழ்   புன்னகை 
மெல்லமாய் வீசியதுமே /
என்னில் கவி வண்டு பிறக்குதடி/
உனது வெட்டு 
விழிகளைக் கண்டதுமே /
மிரண்டு திசையறியாமலே 
எங்கோ பறக்குதடி /

நித்தமும் நம் காதல் மலரட்டுமே /
மொத்தமாய்க் கவிதைகளை 
முத்தங்களாய்  மாற்றிடுவோம் /
கோர்த்த கரமிரண்டும் 
இறுக்கமாய்ப் பற்றிடட்டும் /
காதல் வானிலே 
கற்பனையும் உலாவிடட்டும்/

விருப்போடு நீ வா அன்பே /
என்னிதயமதைத் திறந்து
உன் இருப்பிடமாக்கிடுவேன் /
இறக்கும் வரை 
உள்ளத்தினிலே சுமந்திடுவேன் /
அன்பின் அடையாளமாய் என்னை விருந்தோம்பலாக்கிடுவேன் /

 

No comments:

Post a Comment