Thursday, 6 June 2024

தூவானம்
*************
சாரல் பட்டதுமே 
மரக்கிளை சிரிக்கிறது/
நீர்நிலை உயர்ந்ததுமே
நிலமெல்லாம் மணக்கிறது/
வறண்ட காற்றும் 
தென்றலாய் தடவுகின்றது /
வளர்ந்த வேளாண்மையும்
நிமிர்ந்து நிக்கின்றது/
வானம் அழுதாலே
வனமெல்லாம் மகிழ்கின்றது /
நிறுத்தாமல்
 இசையயெழுப்புகின்றதே
 கூரைவீட்டில்  தூவானம் /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment