ஒங் கட்டழகில் கண்ண
வச்சேன்.
மொட்டாய் நெஞ்சமும்
மலர்ந்திடிச்சு.
ஒங் கட்டு மீச
மேல ஆச வச்சேன்.
கட்டுக் கரும்பாட்டம்
மோகமும் வளர்ந்திடிச்சு.
அய்யனார் சாமியாட்டம் நீ எண்ணு
பொய் சொல்லிக்க மாட்டேன் நானும்.
வீச்சருவாள் பார்வ எண்ணு
கத வீசிக்கவும் மாட்டேன் நானும்.
ஆனாலும் யென் நெஞ்சத்திலே
மஞ்சமிட்ட சிங்கமடா நீயும்.
பேச்சுக்குள்ளே காந்தம் வச்ச
வார்த்தையாலே வளைச்சிப் போட்ட.
உசுரைக் கொள்ளையிட்டு.
மூச்சைக் கொன்னு போட்டாயடா நீயும்.
பாதமும் தடுமாறி பாதையும்
தடம் மாறி போனாயே நீயெடா.
பேதை இவ உள்ளத்திலே
நீ சொல்லால் நட்டுக்கிட்ட
செடியோ முள்ளாய்க் குத்துவதைப் பாரடா.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
No comments:
Post a Comment